அந்த வழக்கு குறித்து விளக்கமளிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சுப்ரீடென்ட் எஸ்.பியை ஆஜராகும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டிருந்தார். ஆனால் கடந்த முறை நடந்த விசாரணையின் போது எஸ்.பி நேரில் ஆஜராகவில்லை இதை அடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் நெல்லை மாவட்ட போலீஸ் சுப்ரீடென்ட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத காரணத்தால் அவரை ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வழக்கை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நேரில் ஆஜராகாத நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.