அவதூறு வீடியோ வெளியிட்டதாக பாஜ பெண் நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார்: போலீசார் விசாரணை

திருவொற்றியூர்: அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜ பெண் நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று, திமுக பெண் வட்ட துணைச் செயலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் சுமதி. திமுக 41வது வட்ட துணை செயலாளரான இவர், நேற்று முன்தினம் இரவு ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், பாஜ வடசென்னை மாவட்ட செயலாளர் தேவி என்பவர், தன்மீது அவதூறு பரப்புவதாகவும், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்தை சித்தரித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அவதூறு வீடியோ வெளியிட்டதாக பாஜ பெண் நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: