வணிகவரித்துறை, பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு மூலம் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் வணிகவரித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அதனால், அத்துறையில் வரி வசூல் பாதிக்கப்படுவதுடன், அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையும் ஏற்படுகிறது.

அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் 15க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 29 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாமல் உள்ளனர். எனவே, பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் அனைத்தையும் உரிய நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

The post வணிகவரித்துறை, பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு மூலம் காலியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: