கோவை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பாஜக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அனுமதி அளித்தார்.