தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நாத்திகர்கள் மற்றும் ஆத்திகர்களை ஒருசேர கொண்டு வந்த அரசு இந்த அரசு. இந்த அரசு வந்த பிறகு 3,117 கோயில்களில் குடமுழுக்கு, 10,880 கோயிலில் உயர் மட்ட தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுள்ளோம். 826 கோயிலில் ரூ.1306 கோடியில் பணிகள் நடந்துள்ளது. இந்த ஆட்சிக்கு பிறகு தான், மருதமலையில் உலகிலேயே உயரமான 184 அடி சிலை நிறுவப்பட உள்ளது. இறைவனையோ, இறை நம்பிக்கை உள்ளவர்களையோ விமர்சனம் செய்வதோ, எதிர் கருத்தை கூறுவதோ வாடிக்கையாக கொள்ளாதவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுவே இறைவனை வணங்குவதற்கு சமம்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post இறை நம்பிக்கை உள்ளவர்களை விமர்சிக்காதவர் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.
