பலகை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டனர். இதனால் கோயிலில் கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள் கனக சபையின் கிழக்கு வாசல் வழியாக ஏறி வழிபட்டனர். உடனே தீட்சிதர்கள் கனக சபையை பூட்டிவிட்டு போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராமன் மற்றும் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில், ‘தீட்சிதர்களின் தடையை மீறி இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கனக சபையில் ஏறியுள்ளனர். கனக சபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதரை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளிவிட்டனர். இதில் பூணூல் அறுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். அப்போது கற்பக கணேச தீட்சிதரின் மனைவி அங்கு வந்து, ‘எப்படி என் வீட்டுக்காரரை கீழே தள்ளி விடலாம், ஜென்ஸ் மேல லேடீஸ் கை வைக்கலாமா, எங்க ஹஸ்பண்டுக்கு உடம்பு முடியாம போச்சுன்னா அவங்க வந்து பார்த்துப்பாங்களா, பூணூலை அறுத்து கீழே பிடித்து தள்ளி இருக்காங்க. லேடீஸ் தொடக்கூடாது என்று வரைமுறை இருக்கு, ஜென்சை லேடீஸ் தொடலாமா, பூஜைகாரரை தீட்சிதர்களே தொட மாட்டார்கள். எப்படி அவங்க எங்க ஹஸ்பண்டை தள்ளிவிட்டாங்க, எவளா இருந்தால் எனக்கு என்ன, இங்க வர சொல்லுங்க..’ என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசாணையை நிறைவேற்றும் வகையில் அமைதியான முறையில் கனக சபையில் ஏறி வழிபாடு செய்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் உடனே கீழே இறங்கிவிட்டனர். தடையை மீறி வழிபட்டதால் தீட்டு எனக் கருதி தீட்சிதர், உடுத்தி இருந்த உடைகள் மற்றும் பூணூலை கழற்றிவிட்டு புது துணி மற்றும் பூணூலை போட்டுக் கொண்டு மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்றார்’ என்றனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஒரு குற்றச்சாட்டும், பக்தர்கள் ஒரு குற்றச்சாட்டும் வைத்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சிதம்பரம் கோயில் கனக சபையில் அதிகாரிகள் வழிபட்ட விவகாரம் தீட்டு என கூறி பூணூல் ஆடைகளை கழற்றிய தீட்சிதர்: ‘எவளா இருந்தாலும் வர சொல்லுங்க..’ என்று பெண் போலீசை ஏக வசனம் பேசிய மனைவி appeared first on Dinakaran.