சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம் காரணமாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையின் இரு புறங்களிலும் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர். சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: