பின்னர் சென்னையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 11:15 மணிக்கு ஜித்தா விமான நிலையம் சென்றடைகிறது. முன்னதாக வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 முறை விமானம் இயக்கப்படுவது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு முறை கடிதங்கள் எழுதினார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை, இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளதை வரவேற்கிறோம். இதற்காக உரிய முயற்சி செய்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை நேரடி விமானம்: முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் நன்றி appeared first on Dinakaran.