சென்னையில் நகை பட்டறையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை: சென்னை சவுகார்பேட்டை ரெட்டி ராமன் தெருவில் உள்ள நகை பட்டறையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் துரைராஜ் தலைமையிலான அதிகாரிகள் 12 சிறுவர்களையும் மீட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ராயபுரம் அரசு சிறுவர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பாதல் சமந்தா(38) என்பவர் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சென்னையில் நகை பட்டறையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: