சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு

டெல்லி : சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்துள்ளது. சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் 20 கவுன்சிலர்களை கொண்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணியைச் சேர்ந்த 8 பேரது வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தமுள்ள 36 வாக்குகளில் 16 கவுன்சிலர்களின் வாக்குகளை பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி என அறிவிகப்பட்டார்.

The post சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: