இதில் நிரந்தர வசிப்பிடம் என்பது நிரந்தரமாக தங்கி இருக்கும் இடத்தை குறிக்கிறது. சொந்த இடத்தை குறிக்கவில்லை. மனுதாரரின் பெற்றோர் மற்றும் தாத்தா நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனினும், பல ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வருகிறது. எனவே டிஆர்ஓ உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்க பரிசீலனை செய்து, 4 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், தேவையில்லாமல் அலைய விட்டதற்காக, மனுதாரருக்கு டிஆர்ஓ ரூ.50 ஆயிரம் அபராதத்தை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறலாம்’’ என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post ஜாதி சான்றிதழ் கோரியவரை அலைய விட்ட டிஆர்ஓவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.