தொடர்ந்து குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது லாரி மோதிது. பின்னர் சாலையோர குடியிருப்பின் மேல் தளத்தில் சுமார் 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியவாறு பாய்ந்து நின்றது. லாரி மோதியதால் கார் தூக்கி வீசப்பட்டு தலைகுப்புற கவிழ்ந்தது.இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குன்னூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். லாரி வீட்டின் மேல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்ததால், குன்னூர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் உதவியோடு கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணிநடைபெற்றது. இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கார் மீது மோதி விபத்து; 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய லாரி: குன்னூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
