பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் ரைபாகினா சாம்பியன்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடந்த பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனை அரினா சபலெங்காவுடன் (பெலாரஸ்) நேற்று மோதிய ரைபாகினா அதிரடியாக விளையாடி 6-0, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார்.

இப்போட்டி 1 மணி, 13 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ரைபாகினா வென்ற 6வது சாம்பியன் பட்டம் இது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பைனலில் சபலெங்காவிடம் அடைந்த தோல்விக்கு பிரிஸ்பேன் தொடரில் ரைபாகினா பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வென்றிருந்த சபலெங்காவின் வெற்றிப் பயணமும் முடிவுக்கு வந்தது.

The post பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் ரைபாகினா சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: