அதை விட்டு தேர்தல் நேரத்தில் கொள்கையை விடுவது எதற்காக? பாஜ ஊழலுக்கு எதிரான கட்சி என்கின்றனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து 42 பேரை தூக்கி விட்டனர். ஒரு ஆளுக்கு 30 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இது லஞ்சம் இல்லையா? இதுபோன்று எவ்வளவோ உதாரணங்கள். இரட்டை இலைக்கு காசு கொடுத்தவர் டிடிவி, அவரோடு பாஜ கூட்டணி வைத்துள்ளது. அப்படி என்றால் ஊழல் இல்லாத கட்சி என்று சொல்வது எப்படி? கட்சியை காப்பாற்றுவதையே லட்சியமாக கொண்டுள்ளனர். இந்தியாவை யார் ஆளுவது என்ற நிலைப்பாட்டில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாட்டை யார் ஆளுவது என்று பாஜ நினைத்து கூட்டணி வைத்தால் அது அதிமுகவிற்கு தேவையற்ற சுமைதான்.இவ்வாறு அவர் கூறினார்.
The post மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைக்க 42 பேருக்கு தலா ரூ.30 கோடி கொடுத்தது லஞ்சம் இல்லையா?: பாஜவுக்கு சீமான் கேள்வி appeared first on Dinakaran.
