திமுக குறித்து அவதூறு பாஜ நிர்வாகி கைது

திருவாரூர்: திமுக குறித்தும், தமிழக அமைச்சர்கள் குறித்தும் முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்புபவரை கைது செய்ய வேண்டும் என்று திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் மாவட்ட பாஜ துணை தலைவராக உள்ள நீடாமங்கலம் தாலுகா கப்பல் உடையான் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(35) இது போன்று அவதூறு பரப்பியது என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

 

The post திமுக குறித்து அவதூறு பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: