எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பாஜ ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும். தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் வரலாற்றைச் சொல்ல, திமுக வரலாற்றை, தலைவர் கலைஞரின் வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இவ்விழாவில் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி பேசினர். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரையாற்றினார். பொருளாளர் டி.ஆர்.பாலு ஏற்புரையாற்றினார். ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.
The post பாஜவின் திசை திருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.