அந்த வீடியோவில், ‘மேடை போட்டால் நீங்கள் எல்லாம் தலைவராகி விடுவீர்களா?. கட்சியில் நிர்வாகிகளை சேர்க்க நாங்கள் எவ்வளவு சிரமப்பட்டோம். அண்ணாமலை ராணுவ வீரர் பற்றி பேசுகிறார். நான் ஒரு கவுன்சிலர். என் திருட்டு வழக்கு (இரும்பு திருடியவர்) போடப்பட்டுள்ளது, சஸ்பெண்ட் செய்துள்ளனர். அதுபற்றி அண்ணாமலை ஏன் பேசல?. இந்த கட்சிக்காக என் வாழ்க்கையே இழந்து விட்டேன். என்ன மீறி நீங்க எப்படி கட்சிய வளர்க்கீங்கக்கனு பாக்கேன்,’ என கூறிய சக்திவேல், அங்கிருந்த மாவட்டத் தலைவர் மற்றும் பாஜ நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசி ஒவ்வொருத்தனையும் கொல்லாம விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பாஜவினர் மட்டுமல்ல கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அக்கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் தங்கர்பச்சானை ஆதரித்து ஏற்கனவே கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடலூர் வந்தபோது பாஜ, பாமக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post பாஜகவால் என்னுடைய வாழ்க்கையே போச்சு… கொல்லாம விடமாட்டேன்…: கட்சி நிர்வாகிகளை மிரட்டும் கவுன்சிலர் appeared first on Dinakaran.