இந்தியா கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக 7 இடங்களிலும், பாஜ கூட்டணியோடு சேர்த்து, 20 இடங்களிலும் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளன. தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை 23 இடங்களில் போட்டியிட்ட பாஜகவோடு ஒப்பிட்டு பேசுவது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகும். இந்நிலையில் தமிழகத்தில் பாஜவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக மோடி பேசியிருப்பது மிகச் சிறந்த கற்பனையாகும். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையிலும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை எதிர்காலத்தில் எப்படி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஜூன் 11ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பாஜவுக்கு ஒளிமயமான எதிர்காலம் என மோடி பேசியிருப்பது மிகச்சிறந்த கற்பனை: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.
