அந்த மனுவில், ‘இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற தீர்ப்பை பீகார் அரசு மீறியுள்ளது’ என்று ெதரிவிக்கப்பட்டது. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்திய பீகார் அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் பீகார் மாநில அரசு, உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடைவிதிக்கவும், நோட்டீஸ் பிறப்பிக்கவும் முடியாது என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை அமர்வு மறுப்பு தெரிவித்தது. அதேபோல வழக்கை பட்டியிடப்படும் தேதியையும் தெரிவிக்க முடியாது என நீதிபதி தெரிவித்து உத்தரவிட்டனர்.
The post பீகார் அரசின் 65 சதவீத இட ஒதுக்கீடு சட்ட வழக்கு; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.