ஆனால் இனிமேல் அவ்வாறு செய்ய மாட்டேன். இனிமேல் இந்த கூட்டணியில் இருப்பேன். மக்களவை தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்கள் தெரிவிப்பார்கள்’ என்றார். இன்றைய நிலையில் பீகாரில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான சீட் ஒதுக்கீடு குறித்தும் பாஜக தலைவர்களிடம் நிதிஷ் குமார் பேசியுள்ளார். மேலும் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த தேர்தலுடன் சேர்த்து பீகார் சட்டப் பேரவை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் பேரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும் பாஜகவின் பலம் அதிகமாக இருப்பதால், நிதிஷ் குமாரின் இந்த யோசனையை பாஜக தலைமை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
The post பீகாரில் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு; பாஜக கூட்டணியில் இருந்து இனிமேல் ஓடமாட்டேன்: மோடியை சந்தித்த நிதிஷ் குமார் பேட்டி appeared first on Dinakaran.