அவர் முன்னுக்கு பின்னாக பதிலளித்தார். விமானம் அதிகாலை மும்பையில் தரையிறங்கியதும், முகமது துலாலை பிடித்து போலீசிடம் விமான பணியாளர்கள் ஒப்படைத்தனர். அதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். ெதாடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர் திரிபாதி, ‘மன ரீதியாக முகமது துலாலுக்கு சிக்கல் இருந்துள்ளது. அவருக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது’ என்றார். அதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முகமது துலாலை இன்று வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று போலீசார் விசாரணை முடிந்த பின்னர், அவரை ஜாமீனில் விடுவிப்பது தொடர்பாக வங்கதேச தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
The post நடுவானில் விமானப் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வங்கதேச வாலிபர் கைது: மும்பை விமானத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.