சனாதன தர்மத்துக்கு ஊறு ஏற்படும்போது கடவுள் நாரயணன் அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமாக வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். ராமேசுவரம், காசி ஆகியவை நாட்டுக்கு பொதுவானவை என்று பேசியிருந்தார். இத்தகைய ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது. சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் என்று ஆளுநர் கூறியதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.
The post யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது: அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநரின் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் appeared first on Dinakaran.