விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

சேலம், மே 1: கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் மற்றும் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், சேலத்தில் நேற்று நடந்தது. அமைப்பின் நிறுவனர் பூபதி தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். பொதுச்செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் செல்வம் தீர்மானங்கள் வாசித்தார்.இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சேலத்தில் பாதாள சாக்கடை திட்டம், முள்ளுவாடி கேட் மேம்பால பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: