கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலம், செப்.29: சேலத்தில் கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தினந்தோறும் வாகன தணிக்கை செய்வதுடன், சிறு,சிறு பெட்டிக்கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று மணியனூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்ெகாண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த நெத்திமேட்டை சேர்ந்த ராஜவேலு(21) என்பவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் விற்பனை செய்து கைதாகியுள்ளார்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: