மரக்கன்றுகள் நடும் விழா

அயோத்தியாப்பட்டணம், செப்.27: அயோத்தியாப்பட்டணம் அடுத்த குப்பனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சின்னத்தாய் பொன்னுசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார், தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், அட்மா குழு தலைவருமான விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நாவல், வேப்பு மற்றும் புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர். தனியார் வங்கி பொது மேலாளர் பிரவீன், மரக்கன்றுகள் வழங்கி பேசினார். பேரூராட்சி துணைத்தலைவர் செல்வசூரியா சேதுபதி, ஒன்றிய பொருளாளர் பழனிவேல், ஏபிடிஓ கஸ்தூரி, கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், முத்துக்குமார், ஊருடையார், இருசப்பன், குமார், சுக்கம்பட்டி ஊராட்சி தலைவர் முருகன், சேரலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Related Stories: