அப்போது சார் பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் என்பதால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போது லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்ததால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இரவு 11.55 மணி வரை சோதனை நடந்தது. சார் பதிவாளர் ஒரு பத்திரத்திற்கு சுமார் 3,000 ரூபாய் வரை லஞ்சமாக பெறுவதாகவும், சில பத்திரத்திற்கு கூடுதலாக பெறுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை appeared first on Dinakaran.
