அதியமான்கோட்டை அருகே பாம்பை கண்டு பயந்து ஓடிய மூதாட்டி கார் மோதி பலி

நல்லம்பள்ளி: அதியமான்கோட்டை அருகே பாம்பை கண்டுபயந்துஓடிய மூதாட்டி கார் மோதி பலியானார். நிற்காமல் சென்ற கார் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஜாகிரி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (75). இவர் இன்று காலை சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த பழனியம்மாள், பயத்தில் சாலையின் நடுபகுதிக்கு ஓடிஉள்ளார்.

அந்த நேரத்தில் நெடுஞ்சாலயைில் அதிகவேமாக வந்த கார் மூதாட்டி மீது மோதி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை அருகில் இருந்தவர்கள் பார்த்து ஓடி வந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாம்பை அடித்துக்கொன்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post அதியமான்கோட்டை அருகே பாம்பை கண்டு பயந்து ஓடிய மூதாட்டி கார் மோதி பலி appeared first on Dinakaran.

Related Stories: