சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது என எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். முதற்கட்ட பணிகள் முழுமை அடைந்து திறப்பு விழா முடிந்தபின் விடுபட்ட இடங்களை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திருமுருகன்பூண்டியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார்.