3வது டெஸ்ட் போட்டியின் போது பவுலிங் பார்முக்கு திரும்பிய நிலையில், அம்மாவின் உடல்நிலை காரணமாக அவசர அவசரமாக சென்னைக்கு திரும்பினார். பின்னர் 24 மணி நேரத்தில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தாலும் பெரியளவில் விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை. ஆனால் 5 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நேரில் ஆதரவு அளிப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 2 இளைஞர்கள் தர்மசாலா பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள், “அஸ்வினின் தனித்துவ ஸ்பெஷல் ரெக்கார்ட் டெஸ்ட் போட்டியின் போதே அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளோம்’’ என்று பேனர் காட்டி பலரின் கவனத்தையும் அந்த 2 பேரும் ஈர்த்தனர். இந்த நிலையில் 100வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின், இளைஞர்கள் சச்சின் மற்றும் முகேஷ் ஆகிய 2 பேரையும் நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஆட்டோகிராஃப் அளித்த அஸ்வின், அவர்களுக்கு நன்றி கூறினார். அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக 2 பேரும் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து தர்மசாலா சென்றுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 பேரையும் அஸ்வின் சந்தித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
The post `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட் போட்டியை காண வந்துள்ளோம்’: தர்மசாலாவில் பேனருடன் 2 தமிழ் இளைஞர்கள் நெகிழ்ச்சி.! நேரில் அழைத்து `ஸ்பின் மாஸ்டர்’ வாழ்த்து appeared first on Dinakaran.