அதன்படி காலை 7 மணிக்கு பாலாபிஷேகமும், 10 மணியளவில் சிறப்பு ஹோமமும், 11 மணிக்கு ஸ்ரீ சர்வ சாய்பாபாவுக்கு கலச அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆரத்தியும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் சிறப்பு ஆரத்தியும், இதனைத் தொடர்ந்து சாய் பானுவின் பாபாவின் பாடல்கள் மற்றும் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
The post ஸ்ரீ சர்வ சாய் பாபா ஆலய கும்பாபிஷேகத்தின் ஆண்டு நிறைவு விழா appeared first on Dinakaran.