இந்த வழக்கில் மேலும் 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து 2 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் இந்த கும்பல் ஆந்திராவில் இருந்து கார்களில் தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்து பின்னர் அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தியதும் தெரியவந்தது. கஞ்சா கடத்தலுக்காக சட்ட கல்லூரி மாணவி திவானியா, ஸ்ரீமதி ஆகிய 2 பெண்களை இந்த கும்பல் பயன்படுத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 16 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைந்தனர்.
The post ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கார்களில் கஞ்சா கடத்தல்: பாஜக, பாமக நிர்வாகிகள், 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கைது appeared first on Dinakaran.