வருஷாபிஷேகத்தையொட்டி முதல் நாளான இன்று காலை மகாசாந்தி ஹோமத்துடன் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபஆராதனை நடைபெற்றது. பின்னர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் இருந்து யானையில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் காட்சியளித்தனர். கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா, அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். வருஷாபிஷேகத்தை காண இன்று காலை கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
The post ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேகம்: திருமுக்குள தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் appeared first on Dinakaran.