அமெரிக்காவில் 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடிகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நேற்று இந்திய சுதந்தர தின கொண்டாட்டம் களைகட்டியது. 41வது ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பை இசை கலைஞர்களின் பாண்டு இசை சாலையின் வழிநெடுகிலும் திரண்ட இந்தியர்களை குதூகலப்படுத்தியது.

கடந்த ஆண்டு சுதந்தர தின விழாவில் நடிகர் அபிஷேக் பச்சன், அல்லுஅர்ஜூன் ஆகியோர் கலந்திருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நடிகை சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு பங்கேற்றனர். மயோசிட்ரிஸ் எண்ணும் தசை எழிற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அமெரிக்காவில் சிகிச்சை பெற நிலையில் அங்கு நடைபெற்ற சுதந்தர தின அணிவகுப்பில் பங்கேற்றார். அவருக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post அமெரிக்காவில் 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: