வேளாண்மை -உழவர் நலத்துறையில் 158 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை – உழவர் நலத்துறையில் 158 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களை விரைவில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு 158 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் 5 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் .குமாரவேல் பாண்டியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வேளாண்மை -உழவர் நலத்துறையில் 158 பேருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: