இக்கட்டான சூழலில் மக்களை விட்டு விலகி இருக்கு முடியாது. எனது தாயாருக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி. வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அவர் அழுத்தம் கொடுக்க வேண்டும். வங்கதேசத்தில் தற்போது இந்திய எதிர்ப்பு சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவாமி லீக் கட்சியை நாட்டில் இருந்தே வெளியேற்ற ஐஎஸ்ஐ வேலை செய்து வருகிறது. சர்வதேச அழுத்தத்தின் மூலம் வங்கதேசத்தில் இருக்கும் அவாமி லீக் தலைவர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய முடியும். வங்கதேசம் அராஜக நாடாக மாறி வருகிறது. இரண்டாவது ஆப்கானிஸ்தானாக மாறப் போகிறது. இதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும். முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய இடைக்கால அரசு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ என்றார்.
The post மீண்டும் என் தாயார் தாயகம் திரும்புவார்; வங்கதேச அராஜகங்களுக்கு ஐஎஸ்ஐ-யே காரணம்: ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் பகீர் பேட்டி appeared first on Dinakaran.