குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் வேலை பார்த்ததற்கு சிறப்பு ஊக்க தொகையும் வழங்கவில்லை என்றும், இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை என்றும் ஒப்பந்த ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உரிய சம்பள தொகையை வழங்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இரவு, பகல் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறை பனி தாக்கம் அதிகரித்துள்ளதால் இரவு நேரத்தில் கம்பளி போன்ற வெம்மை ஆடைகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post உரிய ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவமனை முன்பு ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.