சென்னை: போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின்படி கிருஷ்ணாவிடம் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் வாங்கியதாக பிரதீப் வாக்குமூலம் அளித்தார்.
The post போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை appeared first on Dinakaran.
