தா.பழூர், டிச. 3: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், கொள்ளிடம் உபவடி நிலப்பகுதியில் வேளாண் செய்முறை விளக்கத்தை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நெற்பயிரில் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை தொழில்நுட்பங்களுக்காண ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கார் துவக்கி வைத்தார். அப்போது நெற்பயிரை தாக்கும் பூச்சிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள், வேளாண்மை நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.