திருப்போரூர்: திருப்போரூர் அருகே அம்மன் கோயிலில் இருந்த 3 அம்மன் கற்சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தின் ஓஎம்ஆர் சாலையில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. கோயிலை தினமும் காலை 9 மணிக்கு திறந்து இரவு 9 மணி மூடுவது வழக்கம்த. இங்கு, கற்பகம் அம்மாள் என்பவர் பூசாரியாகவும், நிர்வாகியாகவும் உள்ளார். இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கற்பகம் அம்மாள், கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.