நாகை, டிச.2: நாகையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளாகள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரவின்பிநாயர் தெரிவித்துள்ளார்.தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (என்ஏசி) பெறுவதற்கு ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் மத்திய, மாநில அரசு பொதுத்துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நேரழயாக விண்ணப்பித்து, பயிற்சி பெற வசதியாக மத்திய அரசின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் https://apprenticeshipindia.org என்ற புதிய இணையதளம்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொழிற் பழகுநர் பயிற்சி பெற விரும்புவோர், தங்களது அசல் கல்விச் சான்றிதழ், ஆதார் எண், பான் கார்ட் மற்றும் வங்கி கணக்கு போன்ற விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து தாங்கள் விரும்பும் நிறுவனத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.