திருவாரூர், டிச.1: அரசு அறிவித்துள்ள மினி கிளினிக்கில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு 2000 மினி கிளினிக்குகளை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வரவேற்கிறது. மக்களை நோக்கி மருத்துவம் என்பது மகத்தானது. இருப்பினும் இத்திட்டத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் அடிப்படை பணியிடம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.