நாகர்கோவில், டிச.1 : குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் பலத்தை நிரூபிக்கும் வகையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் சமயங்களிலும், முக்கியமான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சமயங்களிலும் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும். இதில் ஆயுதப்படை, அதிரடிப்படை மற்றும் கலவர தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினர் பங்கேற்பார்கள். இந்த நிலையில், நாகர்கோவிலில் நேற்று திடீரென போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. மணிமேடை, வேப்பமூடு, கோர்ட் ரோடு, டதி ஸ்கூல் சந்திப்பு வழியாக கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.