கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், நவ.27: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சாய் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முறையை கைவிட வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தவறான கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related Stories: