ஆவடி: ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஆர்ச் அந்தோணி நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர், லாரி டிரைவர். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் மோகன்ராஜ் (6). இவன், வெள்ளானூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில், கமலகண்ணன் வீட்டருகில் ஒரு புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டி மூடாமல் திறந்து வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் கழிவுநீர் தொட்டி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை மோகன்ராஜ் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தான். பின்னர், அவன் திடீரென்று புதிதாக கட்டிய பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான்.