புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 1ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, நவ.27: புதுக்கோட்டை மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1.12.2020 (செவ்வாய்கிழமை) அன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் சூம் ஆப் கூகுள் மூட்டில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக கலந்து கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொலிக்காட்சி மூலம் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: