கருங்கல், நவ.27: குமரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டனக் கூட்டம் நடந்தது. கருங்கல் சி.எஸ்.ஐ.மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு மகளிர் அணி அமைப்பாளர் முனைவர் கிளாடிஸ் லில்லி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தை மாநில மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்பி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: சமூகத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படுவது இல்லை. பெண்களுக்கான வாய்ப்பை கேட்டால் வன்முறை நடக்கிறது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வே இல்லை.