காரைக்குடி, நவ.25: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மீன்வள அறிவியல் துறை, விலங்கு நலன் மற்றும் மேலாண்மை துறை சார்பில் நிலையான மீன் வளத்திற்கான அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடந்தது. மீன்வள அறிவியல் துறை தலைவர் கண்ணபிரான் வரவேற்றார். துணைவேந்தர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், பருவநிலை மாற்றம் அதிக அளவிலான மீன்பிடிப்பு போன்ற காரணிகளால் மீன்வளம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதனை ஈடுகட்டும் வகையில் அனைத்து மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்கள், துறை சார்ந்த நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் ஆகியன இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய தொழில் நுட்பங்களை கண்டறிந்து நிலையான மீன் வளத்தை பாதுகாக்க வேண்டும்.