கோவை,நவ.25: கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருகூர் பேரூராட்சி ராவத்தூர் சாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.3.87 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைத்திடவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.