பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள மலைகளிலிருந்து அதிக அளவில் மழைநீர் கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணைக்கு வருவதால் வேகமாக நிரம்புகிறது. இதனால், அணையிலிருந்து உபரிநீர் நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு அருகே கொதஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைப்புரண்டு ஓடுகிறது. ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணாபுரம் அணைக்கு மழைநீர் வேகமாக நிரம்புவதால், 15வது முறையாக நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து வினாடிக்கு 900 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.