விருதுநகர், நவ.24: கவுசிகா ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் வீரபெருமாள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். மனுவில், விருதுநகரில் கௌசிகா ஆறு நகர் பகுதி அருகே சென்று குல்லூர் சந்தையில் உள்ள அணையில் முடிவடைகிறது. விருதுநகர் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றும் கழிவுநீர் மற்றும் மலம் கலந்த கழிவு நீர் நேரடியாக கவுசிகா ஆற்றில் கலக்கிறது. நகராட்சி நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட கால்வாய்கள் வழியாக ஆற்றில் வந்து கலக்கப்படுகிறது.